கொரோனா அவசர நிலை எப்போது முடிவுக்கு வரும்?: ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து
ஜேர்மனியில் கொரோனா அவரசர நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜேர்மனியில் கொரோனா தொடர்பிலான சிறப்புக் கட்டுப்பாடுகள், நவம்பர் 25ஆம் திகதியுடன் முடிவுக்கு வரலாம் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn தெரிவித்துள்ளதாக Bild பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தாலும், கட்டிடங்களுக்குள் நுழைவதற்கு, கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுதல் முதலான பல விதிகள், தடுப்பூசிகள் மற்றும் பிற சுகாதார விதிமுறைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றே தெரிகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது என்ன?
’2020 மார்ச் முதல், சுமார் 19 மாதங்களாக அமுலில் இருந்த அவசர நிலை முடிவுக்கு வருகிறது’ என்று கூறிய Spahn, ’நாம் அவசர நிலையிலிருந்து, எச்சரிக்கையாக இருக்கும் ஒரு நிலைக்கு கடந்து செல்கிறோம்’ என்று கூறியுள்ளதாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.