தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா?
கோடையில் ஆரோக்கியமாக இருக்க, உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அப்படி இல்லையேல் நீரிழப்பு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே, கோடையில் நீரேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடலை நீரேற்றமாக வைத்திருக்க தேங்காய் தண்ணீர் ஒரு நல்ல வழி.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தேங்காய் நீர், உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கிறது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தேங்காய் நீரின் நன்மைகளை பலரும் அறிந்திருப்பார்கள்.
ஆனால், ஆரோக்கிய குணங்கள் நிறைந்த இந்த தண்ணீர் தென்னையின் உள்ளே எங்கிருந்து வருகிறது என்பது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது?
தேங்காயில் உள்ள நீர் உண்மையில் தாவரத்தின் வித்தகவிழையம் (endosperm) பகுதியாகும்.
வித்தகவிழையம் (endosperm) என்பது கருத்தரித்தலின் போது பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உற்பத்தியாகும் திசுவாகும்.
மரத்தின் வேர்கள் வழியாக, இந்த நீர் சேகரிக்கப்பட்டு பின்னர் பழங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வேர்கள் மற்றும் பழங்களின் செல்கள் மூலம், இந்த நீர் பழத்தின் உள்ளே வருகிறது.
இதற்குப் பிறகு, இந்த தேங்காய்கள் பழுக்க ஆரம்பிக்கும் போது, எண்டோஸ்பெர்ம் தண்ணீருக்குள் கரைந்து, தண்ணீர் படிப்படியாக காய்ந்துவிடும். தேங்காய் காய்ந்ததும், உண்ணும் தேங்காய் கருவே இந்த எண்டோஸ்பெர்மின் திட வடிவமாகும்.
இந்த முழு செயல்முறையும் தென்னை மரத்தின் செல்கள் மூலம் நடக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |