நித்தியானந்தாவின் கைலாசா எங்கே உள்ளது? - நீதிமன்றத்தில் விளக்கமளித்த சீடர்
நித்தியானந்தாவின் கைலாசா உள்ள இடம் குறித்து அவரது சீடர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
கைலாசாவின் இருப்பிடம்
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று 2013 ஆம் ஆண்டு தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் இன்று நடைபெற்றது.
நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனாவிடம், மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என நீதிபதிகள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவரது சீடர் அரச்சனா, "ஆஸ்திரேலியா அருகே உள்ள யுஎஸ்கே(USK) என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருவதாக கூறினார்.
மேலும், தங்கள் தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |