கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடும் பறவை: எது தெரியுமா?
பறவைகளில் பறக்க தெரியாத பறவையான நெருப்புக்கோழி அதனுடைய கூட்டில் 100 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.
அதனுடைய ஒவ்வொரு முட்டையும் சுமார் 6 அங்குல நீளமும் 15 முதல் 18 அங்குல சுற்றளவும் கொண்டுள்ளது.
நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகவும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.
பறவை இனத்தில் நெருப்புக்கோழி வைக்கப்பட்டாலும் இந்த பறவையால் பறக்க முடியாது.
ஆனால் அதனுடைய நீளமான கால்களை கொண்டு அதனால் வேகமாக ஓட முடியும்.
ஆபத்தை உணரும்போது, நெருப்புக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது.
நெருப்புக்கோழிகளுக்கு பற்கள் இல்லை என்பதால் உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது.
நெருப்புக்கோழிகளின் முட்டைகளை பகலில் பெண் நெருப்புக்கோழிகளாலும் இரவில் ஆண் நெருப்புக்கோழிகளாலும் அடைகாக்கப் படுகின்றன.
மேலும் இந்த நெருப்புக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |