உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா?
உலகின் மிகச்சிறந்த மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளின் முக்கிய இடத்தில் இட்லி உள்ளது.
மருத்துவர்களும், எளிதில் செரிமானமாகும் இட்லியை காலை உணவாக பரிந்துரைக்கின்றனர்.
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான உணவுகள் இருந்தாலும் இட்லிக்காக உலகம் முழுவதும் பிரபலமான நகரம் ஒன்று உள்ளது.

அந்தவகையில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உலகின் இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
சென்னை நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இட்லி கடைகள் நிறைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
தமிழகத்தில் சாதாரண இட்லி, மினி இட்லி, ரவா இட்லி, மசாலா இட்லி, கொத்து இட்லி உள்ளிட்ட ஏராளமான வகைகள் கிடைக்கின்றன.
சாலையோரக் கடைகள் முதல் புகழ்பெற்ற உணவகங்கள் வரை என ஆயிரக்கணக்கான இட்லிக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் நிறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா முதன்முதலில் 2015ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடப்பட்டது.
அவ்விழாவில் 1,328 வகையான இட்லிகள் தயாரிக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் 44 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட இட்லியும் தயாரிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |