இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?
ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, முதலமைச்சர்கள் கடைசியாக போட்டியிட்ட தேர்தல்களின் போது வெளியிட்ட பிராமண பத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுளளது.
இந்தியாவின் இளம் முதலமைச்சர்
மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.
வயதின் அடிப்படையில், இந்தியாவின் இளம் முதலமைச்சராக 44 வயதான அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளனர்.

அதிக வயதுடைய முதலமைச்சராக 75 வயதான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளார்.

41 - 50 வயதில் 8 முதலமைச்சர்களும், 51 - 60 வயதில் 17 முதலமைச்சர்களும், 61 - 70 வயதில் 2 முதலமைச்சர்களும், 71 - 80 வயதில் 4 முதலமைச்சர்களும் உள்ளனர்.
அதிக கடன் உள்ள முதல்வர்
சொத்து மதிப்பின் அடிப்படையில், ரூ.1,413 கோடிகளுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக உள்ளார்.

ரூ.931 கோடிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்திலும், ரூ.648 கோடிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3வது இடத்திலும், ரூ.332 கோடிகளுடன் அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 3வது இடத்திலும் உள்ளனர்.
இவர்கள் 4 பேரும், ரூ.50 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள முதலமைச்சராக உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.
இதே போல், அதிக கடன் உள்ள முதல்வராக ரூ.265 கோடி கடனுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார்.
அதிக குற்ற வழக்கு உள்ள முதல்வர்
31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது.

அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 72 கடுமையான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் உட்பட 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |