வாய் வழியாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம்: எது தெரியுமா?
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு வகையான சிறப்பு பண்புகளை கொண்டுள்ளன.
உலகில் உள்ள உயிரினங்கள் சில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன, சில உயிரினம் குட்டி ஈனுகின்றன.
ஆனால் ஒரு உயிரினம் மட்டும் வாயின் வழி பிறக்கும் திறன் கொண்டுள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அந்த உயிரினம், அதிக அளவில் சத்தங்களையும் எழுப்புகின்ற, பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள தவளை தான்.
தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இது சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுகின்றன.
தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன.
அந்தவகையில், தவளைகள் தன்னுடைய வாயில் வைத்து முட்டைகளை அடைக்காக்கின்றன.
பொரிக்கும் தருணத்தில் தண்ணீருக்கு மேலே வாய் வழியாக முட்டைகளை வெளியேற்றுகின்றன.
வயிற்றில் அடைகாக்கும் தவளைகளும் முன்னர் இருந்துள்ளன. ஆனால் அவை 1980களின் மத்தியில் அழிந்து விட்டன.
குறிப்பிட்ட அளவிலான இந்த தவளை இனம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் ஒரு சிறிய பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த இனம் முற்றிலும் அழிந்து போகாமல் காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |