இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம்.. எது தெரியுமா?
97 Rivers Flow Through a Single District in India – இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும்.
எந்த மாவட்டம்?
இந்தியாவில் பல முக்கியமான மற்றும் பிரபலமான ஆறுகள் உள்ளன. சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிறிய ஆறுகளும் பாய்கின்றன.
அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 185 ஆறுகள் உள்ளன. இதில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் 97 ஆறுகள் பாய்கின்றன.

குஜராத்தில் உள்ள ஆறுகள் கீழ் குஜராத், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குஜராத்தின் கட்ச் பகுதியில் அதிகபட்சமாக 97 ஆறுகள் பாய்கின்றன.
ஆனால், இவற்றில் பெரும்பாலான ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதில்லை. பருவமழை காலத்தில் மட்டுமே இந்த ஆறுகளில் நீர் பாய்கிறது.
97 ஆறுகள்

கட்ச் பகுதியில் உள்ள ஆறுகள் அவை செல்லும் திசையின் அடிப்படையில் வடக்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதி இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
கட்ச்சின் வடக்குப் பகுதியில் குக்கி, காளி, சுவி, மாலன், சரண் மற்றும் காரி உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.
தெற்குப் பகுதியில் நைரோ, கனகாவதி, நாகமதி, கரோட், மிதி, சாங் மற்றும் சாய் உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இவை கட்ச் வளைகுடாவில் கலக்கின்றன.

கட்ச்சில் ருக்மாவதி, சுவி, மாலன், சரண், சாகர், மிதி, குருத், வெக்தி, சாங், காரி, நாரா, பஞ்சோரா, கரோட், கொட்டி, காளி, கனகாவதி மற்றும் ருத்ரமாதா உள்ளிட்ட பல முக்கியமான ஆறுகள் உள்ளன.
கட்ச்சில் உள்ள சில ஆறுகள் கடலில் கலப்பதில்லை. இவை கன்னி நதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
பனாஸ், சரஸ்வதி, ரூபன், லூனி, மச்சு, கோடத்ரோய், பிராமினி, காரி, ஃபால்கி, நாரா, சுவி, பூர் மற்றும் புருட் ஆகியவை குஜராத்தின் முக்கியமான கன்னி நதிகளாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |