தமிழகத்தில் அதிக கல்வியறிவு உள்ள மாவட்டம்.., எது தெரியுமா?
தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகும்.
கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் கல்வி துறைகளில் இந்த மாநிலம் முக்கிய முன்னேற்றம் பெற்றுள்ளது.
இந்தியா மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக கருதப்படுகிறது.

மாநிலத்தின் மொத்த வளர்ச்சியிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுத்தறிவு விகிதம் மாறுபடுகிறது.
பரப்பளவில் இந்தியாவின் 10வது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் 6வது பெரிய மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த எழுத்தறிவு விகிதம் 80.09% ஆகும்.

அதில் ஆண்கள் எழுத்தறிவு 86.77%, பெண்கள் எழுத்தறிவு 73.44% உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.
இந்த மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 91.75% ஆகும். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதும், நல்ல கல்வி வசதிகள் இருப்பதும் இந்த உயர்ந்த விகிதத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |