தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாவட்டத்தில் இருக்கிறது?
தமிழக மாவட்டம் ஒன்றில் ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் செயல்படும் அரசு பள்ளி உள்ளது.
எங்கிருக்கிறது?
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுர மாவட்டம், தொண்டி அருகே தளிர் மருங்கூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியானது ஒரே ஒரு மாணவிக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்க நடைபெறவில்லை. கடந்த ஆண்டில் இந்த பள்ளியில் 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவர் மட்டுமே படித்து வந்தனர்.
ஆனால், இந்த ஆண்டில் 5-ம் வகுப்பு மாணவன் 6-ம் வகுப்பு படிப்பதற்காக வேறு பள்ளிக்கு செல்கிறார். இதனால் இந்த பள்ளியில் 2-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு ஒரே ஒரு மாணவி மட்டும் தான் செல்கிறார்.
மேலும், இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், "பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாவிட்டால் பள்ளியை மூடி விடுவார்கள் என்று தெரிந்ததால் தனியார் பள்ளியில் படித்து வந்த என் குழந்தையை இந்த பள்ளியில் சேர்த்தேன்.
ஆனால், தற்போது என் மகள் ஒருவர் மட்டுமே படிக்க உள்ளதால் விளையாட்டுக்கு, பேச்சுத்துணைக்கு கூட யாரும் இல்லை. இதனால் என் மகள் பள்ளிக்கு செல்ல பயப்படுகிறார். மாணவர்கள் யாரும் இல்லாததால் இந்த பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |