தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?
தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
1956ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. நிர்வாக வசதிக்காக தற்போது அவை 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்கள் எது என்பது குறித்து பாரக்கலாம்.
அதன்படி, 6266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தின் தலைமையகம் திண்டுக்கல் நகரம். முன்பு இது மதுரை மாவட்டம் பகுதியாக இருந்தது.
பின்னர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரம் விவசாயம்.
குறிப்பாக திராட்சை, வாழை, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
மேலும், தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்திக்கும் இந்த மாவட்டம் முக்கிய மையமாக உள்ளது.
இந்த மாவட்டம் ஜவுளித் தொழிலிலும் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், திண்டுக்கல் பூட்டு இந்தியா முழுவதும் பிரபலமானது.
சுற்றுலா தலங்களிலும் திண்டுக்கல் முக்கிய இடம் பெற்றுள்ளது.
கொடைக்கானல் என்ற மலைப்பகுதி இம்மாவட்டத்தில் உள்ளது. இது மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.
மேலும், திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது நாயக்கர் மற்றும் ஹைதர் அலி காலத்தைச் சேர்ந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |