இந்தியாவின் முதல் வங்கி தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டது.., எங்கு தெரியுமா?
உலக பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
இந்தியாவிலும் வர்த்தகம், வணிகம் மற்றும் கடன் பரிவர்த்தனைகளை முன்னேற்றுவதில் வங்கிகள் முக்கியமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வங்கித்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்பே, மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் போன்ற துறைமுக நகரங்களில் பல ஆரம்பகால வங்கிகள் நிறுவப்பட்டன.
அவை வர்த்தகத்தை எளிதாக்கவும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் முக்கிய பங்காற்றின.
பொதுவாக இந்தியாவின் மிகப் பழமையான வங்கி என்று கேட்டால் பலர் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) என கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட வங்கி மெட்ராஸ் வங்கி ஆகும். இந்த வங்கி 1683ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்டது.
பிரிட்டிஷ் வர்த்தகர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் மேற்கொண்ட வர்த்தக தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது உருவாக்கப்பட்டது.
பின்னர் 1843ஆம் ஆண்டு இந்த வங்கி மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டு இம்பீரியல் வங்கி எனப்படும் பெரிய வங்கியின் ஒரு பகுதியாக மாறியது.
காலப்போக்கில் இந்த இம்பீரியல் வங்கிதான் மாற்றம் பெற்று பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) ஆக உருவானது.
மெட்ராஸ் வங்கிக்குப் பிறகு இந்தியாவில் Bank of Bombay (1720), Bank of Hindustan (1770), General Bank of Bengal and Bihar (1773) போன்ற பல வங்கிகள் தொடங்கப்பட்டன.
சில வங்கிகள் பின்னர் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன, சில வங்கிகள் மூடப்பட்டன.
இதனால், இந்தியாவின் வங்கித்துறையின் தொடக்கம் சென்னை நகரத்திலிருந்தே ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆரம்பகால வங்கிகளே இன்று இந்தியாவில் உள்ள நவீன வங்கித்துறைக்கான அடித்தளத்தை அமைத்தன.
இந்தியாவில் முதலில் நிறுவப்பட்ட வங்கி என்ற சிறப்பை மெட்ராஸ் வங்கி(1683) பெற்றிருந்தாலும், இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான வங்கி என்ற பெருமையை பாரத ஸ்டேட் வங்கி (1806ல் கல்கத்தா வங்கியாகத் தொடங்கப்பட்டது) கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |