தொலைக்காட்சியில் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்த திரிஷா படம்.., எது தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை திரிஷா.
தற்போது வயது 40ஐ கடந்துவிட்டாலும் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.
திரிஷா நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இதுதவிர மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ள திரிஷா இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் திரிஷா, அங்கு சிரஞ்சீவி உடன் விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷா நடித்துள்ள தெலுங்கு படம் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை அப்படம் படைத்துள்ளது.
அப்படம் தொலைக்காட்சியில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி உள்ளது. மேலும், உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.
சாதனை படைத்த இப்படத்தின் பெயர் அதடு. கடந்த 2005ஆம் ஆண்டு இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா.
20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படம் ரூ.30 கோடி வசூல் செய்து அசத்தியது.
இந்த படம் ஸ்டார் மா சேனலில் தான் அதிகமுறை ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |