பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா?
which place is called as the end of the earth- நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன.
இந்நிலையில், பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம் குறித்து பார்க்கலாம்.
வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்த் கேப், கடற்கரை மற்றும் பனிப்பாறைகளுடன் கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.

இந்த இடத்திற்குச் E-69 என்ற நெடுஞ்சாலை வழியாக சொல்லலாம்.
நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடகோடி முனையான நார்த் கேப் பகுதிக்குச் செல்கிறது.
இந்த சாலை உலகின் கடைசி சாலை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கடல் மற்றும் பனி நிரம்பிய நிலப்பரப்புகளை காணலாம்.

நார்த் கேப் பகுதி இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விமானப் பயணத்தின் மூலம் நார்வே சென்ற பிறகு, E-69 நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திற்கு செல்லலாம்.
மேலும், ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், நார்த் கேப்பில் கடுமையான குளிர் நிலவுகிறது.

குளிர்காலத்தில் வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும். கோடைக்காலத்திலும் இங்கு குளிர்ச்சியான வானிலை காணப்படும்.
இந்த பகுதியில் கோடைக்காலத்தில் நீண்ட நேரம் சூரியன் மறையாமல் இருக்கும் இயற்கை நிகழ்வை காணலாம்.
இதனால், உலகம் முழுவதும் இருந்து சாகசப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை நார்த் கேப் பகுதிக்கு வருகின்றார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |