வயது வந்தோர் கல்வியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது தெரியுமா?
2024-25ஆம் கல்வியாண்டில் வயது வந்தோர் கல்வியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது என்பதை பார்க்கலாம்.
எந்த மாநிலம்?
2024-25ஆம் கல்வியாண்டில் வயது வந்தோர் கல்வியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் கல்வியறிவு பெறும் நோக்கத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்திய அரசு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை நடத்தி வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து, அவர்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி வந்தோர் கல்வியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
அதே போல டெல்லியில் 7,959 பேர் தேர்வெழுதிய நிலையில், 7, 901 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 77 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில் 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
முக்கியமாக பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |