இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம்: எது தெரியுமா?
இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம்.
அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதலில் சூரியன் உதயமாகிறது.
இந்த ஊர் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும்.
மேலும் சிறப்பை கூட்டும் விதமாக பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இங்கு அமைந்துள்ளது.
இந்த டோங் கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளையும் விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடும்.
மேலும், அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |