நரை முடியை கருப்பாக மாற்றனுமா? அப்போ இது இருந்தால் போதும்!
பொதுவாகவே பெண்களுக்கு முடி வளர்ப்பதில் அதீத விருப்பம் இருக்கும். முடியை நீளமாக வளர்க்க விரும்புபவர்களை விட முடியை கரு கரு என்று வளர வைப்பவர்களுக்கு தான் விருப்பம் அதிகமாக இருக்கும்.
அதில் ஏராளமானவர்கள் தங்களது முடியானது இயற்கையாகவே கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் தற்போதைய சமூகத்தினர் பல விதமான பொருட்களை பயன்படுத்தி முடியை மோசமாக்கிக் கொள்கின்றார்கள்.
இதன் விளைவாக சிறுவயதிலேயே நரைக்கத் தொடங்கி, வேகமாக உதிருகிறது. ஆகவே இதில் இருந்து விடுப்பட்டு, இயற்கையான முறையில் தலை முடியை எப்படி கருமையாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இயற்கையாகவே முடியை கருமையாக வைத்துக்கொள்ள முதலில் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். இந்த எண்ணெயை கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
கறிவேப்பிலை
-
வெந்தய விதைகள்
- நைஜெல்லா விதைகள்
- வெங்காயம் தோல்கள்
- கடுகு எண்ணெய்
செய்முறை
-
முதலில் 2 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி வெங்காயத் தோல்கள், 1 ஸ்பூன் கருஞ்சீரகம் விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
- இவை அனைத்தையும் சுமார் 8 நிமிடங்கள் வறுக்கவும்.
-
பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- இந்த பொடியுடன் 2 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும்.
-
இதை வேர்கள் முதல் முடியின் நீளம் வரை நன்கு தடவி ஒரு மணித்தியாலம் அப்படியே விடவும்.
மேலும் வெங்காயச் சாற்றை எடுத்து பருத்தியின் உதவியுடன் உச்சந்தலையில் தடவவும். லேசான கைகளால் மசாஜ் செய்த பிறகு, சிறிது நேரம் விட்டுவிட்டு கழுவவும். நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நரைத்த முடிகளை மீண்டும் கருமையாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
h |