12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார்?
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.
யார் அவர்?
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல, மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவிகள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு அவரது பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |