தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் யார்? ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்:தொண்டர்கள் செய்த செயலின் வீடியோ காட்சி
தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், அதிமுகவின் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.
கடந்த மாதம் 6-ஆம் திகதி நடைபெற்ற, தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, கடந்த 2-ஆம் திகதி நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
இதற்கான முதலமைச்சர் பொறுப்பை ஸ்டாலின் இன்று ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து எதிர்கட்சி தலைவர் தெரிவு செய்வது குறித்து இன்று மாலை 4:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
#JUSTIN | ஓபிஎஸ்-ஆ ஈபிஎஸ்-ஆ : ஜெயலலிதா நினைவிடத்தில் போட்டிப்போட்டு முழுக்கம் எழுப்பிய ஆதரவாளர்கள்!#SunNews | #ADMK | #OPS | #EPS pic.twitter.com/RTXjvoDTr9
— Sun News (@sunnewstamil) May 7, 2021
இந்தக் கூட்டத்துக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்றனர்.
இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன் படி இந்த கூட்டம் மாலை துவங்கியது. இன்று எப்படியும் யார் எதிர் கட்சித் தலைவர் என்ற முடிவு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களுக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ -க்கள் கூட்டத்திலும் பேச்சு வார்த்தையில் சுமூக நிலை இல்லாததால் எதிர் கட்சித் தலைவரை தெரிவு செய்ய முடியவில்லை. முடிவு எதுவும் எட்டப்படாததால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளார்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று ஆதரவு முழக்கம் கொடுத்தனர், அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.