கொரோனா வைரஸ் யாரை அதிகம் தாக்க வாய்ப்பிருக்கு? அவர்கள் எப்படி இதிலிருந்து தப்பிக்கலாம்?
தற்போது உலகமெங்கும் மக்கள் உச்சரிக்கும் ஒரே சொல் கொரோனா என்பது தான். இது உலகையை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோயாக மாறியுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த தொற்றின் தாக்குதலிருந்து தப்பிக்கவே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டே வருகின்றது.
இந்த வைரஸ் தொற்றால் பல அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தும் உள்ளனர்.இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க எப்போதும் முன்னேச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி கொண்டு தான் வருகின்றார்கள்.
அந்தவகையில் இந்த வைரஸ் பாதிப்பு யாருக்கு ஏற்படும், இதற்கு என்ன முன்னேச்சரிக்கை நடவடிக்கை செய்யலாம் என்பது குறித்தும் இங்கே அறிந்து கொள்வோம்.
யாரை வேகமாக தாக்கும்?
உடம்பு வலி, இருமல், சளித் தொல்லை போன்ற அறிகுறிகள் சிலருக்கு தீவிரமாக வருகிறது. இப்படி அறிகுறிகள் தீவிரமாகக் கூடிய நபர்களாக வயதானவர்களாகவும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் தான் அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
வயதானவர்களும் நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்கும்.
சிலருக்கு ஏற்கனவே இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் நோய் பாதிப்பு இருக்கும். இவர்கள் சீக்கிரமே கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகின்றது.
பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள் யார்?
- நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள்
- நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா கொண்டவர்கள்
- டயாபெட்டீஸ் நோயாளிகள்
- எச். ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறைபாடு கொண்டவர்கள்
- அதிக உடல் பருமன் உடையவர்கள்
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்கள்
- உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து இருப்பவர்கள்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள்
- சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் போன்றவர்கள்
முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள்
- குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஏற்கனவே மற்ற உடல் பாதிப்புகளை பெற்று இருப்பவர்கள் கூட்டங்களை தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது.
- உங்களை நீங்கள் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்ப் பாதிப்பில் இருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
அனைத்து சமூக தொடர்புகளையும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், நோயெதிப்பு சக்தி குறைந்த நபர்கள் தவிர்ப்பது நல்லது.
- கொரனோவால் பாதிக்கப்பட்ட நபர்களும் இது மற்றவருக்கு பரவக் கூடியது என்பதை உணர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.