ஹொட்டல் அறைகளில் ஏன் கடிகாரம் வைக்கப்படுவதில்லை? காரணம் தெரியுமா
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
என்ன காரணம்?
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணம் பல பேருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய காலத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதால் நமக்கு நேரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், நீண்ட காலமாகவே ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்கு கடிகாரம் வைத்திருந்தால் ஹொட்டலுக்கு வரும் விருந்தினர்கள் அதனை பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.
அதேபோல, சில ஹொட்டல்கள் வணிக நோக்கங்களுக்காக அதனை வைப்பதில்லை. அதாவது, நேரம் தெரியாவிட்டால் விருந்தினர்கள் ஹொட்டலில் அதிக நேரம் செலவிட முடியும். இதன் மூலம் ஹொட்டல் நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும்.
மேலும், கடிகாரத்தின் சத்தம் விருந்தினர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். அமைதியான சூழலை ஏற்படுத்த அதனை தவிர்க்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |