இளவரசர் ஹரி ஓபரா பேட்டிக்கு சம்மதித்தது ஏன்?: வெளியாகியுள்ள புதிய தகவல்
தனது இராணுவ பட்டங்களை மகாராணியார் பறித்த கோபத்தில்தான் இளவரசர் ஹரி ஓபரா பேட்டிக்கே சம்மதித்தார் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அரண்மனையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ராஜ குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும், தனது இராணுவ பட்டங்கள் மட்டும் தன்னை விட்டு எடுக்கப்படாது என ஹரி நம்பிக்கொண்டிருந்தாராம். ஆனால், பிரித்தானிய மகாராணியார் ஹரியின் இராணுவ பட்டங்களை பறித்துவிட்டார்.
தான் இராணுவத்தில் பணி புரிந்த நிலையில் தனக்குக் கிடைத்த பட்டங்கள் மிகவும் முக்கியமானவை என ஹரி கருதும் நிலையில், அவை பறிக்கப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்ட ஹரி, மிகவும் கோபமடைந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, மிகவும் கோபமுற்ற நிலையில், தனது பட்டங்கள் பறிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஹரி ஓபரா பேட்டிக்கு ஒப்புக்கொண்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.