பிரித்தானிய மகாராணியாருக்கு இன்று பிறந்தநாள்... ஆனால் அவர் ஒரே ஆண்டில் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடுவார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரித்தானிய மகாராணியார் இன்று தனது 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால், அவர் ஒரே ஆண்டில் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடுவார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உண்மையில், மகாராணியார் 1926ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிதான் பிறந்தார். ஆனால், ஒவ்வோராண்டும், ஜூன் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, அவரது பிறந்தநாளை நாடே கொண்டாடும்
அது ஏன்? மன்னர் இரண்டாம் ஜார்ஜ் என்பவர் நவம்பர் மாதம் பிறந்தவர்.
ஆனால், நவம்பர் மிகவும் குளிராக இருக்கும் என்பதால், மக்கள் தன் அரண்மனையின் முன்பு கூடி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது கடினமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, 1748ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இராணுவ வருடாந்திர அணிவகுப்பு நடக்கும் நாளை தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாளாக அறிவித்தாராம்.
அப்போதுதான், ஆட்சி செய்பவர்கள் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் முறை உருவாகியிருக்கிறது.
அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றித்தான் பிரித்தானிய மகாராணியாரும் ஆண்டில் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடி வருகிறாராம்!