2-வது டெஸ்ட் போட்டியில் நான் ஏன் விளையாடவில்லை? உண்மையை விளக்கிய கோலி
இந்திய அணியின் கேப்டன் ஆன, விராட் கோலி தான் உண்மையிலே முதுகு வலி காரணமாகவே விளையாடவில்லை என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதுகுவலி காரணமாக விளையாடாமல் போன கோலி, தற்போது முழு உடற்தகுதி பெற்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்நிலையில், நான் தற்போது முற்றிலும் உடற்தகுதியுடன் இருக்கிறேன், சிராஜ் குணமடைந்து வருகிறார்.
தற்போது, அவர் போட்டிக்கு தயாராக இல்லை. இதனால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். உண்மையிலே தனக்கு முதுகு தசைபிடிப்பு இருந்தது, அதன் காரணமாகவே நான் விளையாடவில்லை.
போட்டிகளின் போது எனக்கு முதுகுத் தசைப்பிடிப்பு ஏற்பட்டது, இதற்கு முன்பு இல்லை. அதாவது நீங்கள் ஒரு மனிதர் உங்கள் உடல் தேய்மானம் அடையும் என்ற யதார்த்தத்தையே எனக்கு இது காட்டியுள்ளது.
இது உங்களுக்கு புரியவில்லை என்றால், நீங்கள் வெறுப்படைவீர்கள். ஆனால் ஆம், இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது, என்னால் அதை நம்ப முடியவில்லை, மேலும் பலரால் என்னால் விளையாட முடியாது என்பதை நம்ப முடியவில்லை. இவையெல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்.