ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்காக காரணம் இது தான்! உண்மையை உடைத்த பிசிசிஐ தலைவர்
கொரோனாவால் வீரர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் ராஜீவ்சுக்லா கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்தாண்டும் துவங்கியது. 14-வது இந்த சீசனில் ஆரம்பத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு, அதன் பின் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொல்கத்தா அணி வீரரான வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இவர்களை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சென்னை அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
மேலும் டெல்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கும், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நடத்திய அவசர கூட்டத்தில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கான தெளிவான காரணம் வெளியாகமல் இருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் ராஜிவ் சுக்லா, ஐபிஎல் தொடர் ரத்து குறித்து பேசியுள்ளார்.
அதில், கிரிக்கெட் வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரது பாதுகாப்புக்கும் உத்திரவாதம் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.
மேலும், இந்த சீசனில் உதவியாக இருந்த சுகாதாரத்துறையினர், வீரர்கள், ஸ்டாப்ஸ், அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், பார்ட்னர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.