27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்கள் திடீர் ரத்து: இஸ்ரேல் அதிரடி
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இஸ்ரேல் செல்ல இருந்த நிலையில், அவர்கள் பயணப்பட இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விசாக்களை இஸ்ரேல் அரசு ரத்து செய்துள்ளது.
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்கள் ரத்து
ஜெருசலேமிலுள்ள பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேருக்கு இஸ்ரேல் வர அழைப்பு விடுத்திருந்தது.
அவர்களுடைய பயணம் நேற்று துவங்க இருந்த நிலையில், இஸ்ரேல் அரசு திடீரென அவர்கள் 27 பேருடைய விசாக்களையும் ரத்து செய்துவிட்டது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதே தங்கள் இஸ்ரேல் பயணத்தின் நோக்கம் என 27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அந்த குழு தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் அரசுக்கு எதிராக செயல்படக்கூடும் என கருதப்படுவோருக்கு இஸ்ரேல் அதிகாரிகள் தடை விதிக்கலாம் என்னும் சட்டத்தின் கீழ் அந்த 27 பேரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் விரைவில் அங்கீகரிக்கலாம் என கூறியுள்ள விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசலை உருவாக்கியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசு இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |