வெங்கடேஷ் அய்யருக்கு ஏன் பந்து வீச தரவில்லை! ஷிகார் தவான் கொடுத்த விளக்கம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெங்கடேஷ் அய்யருக்கு ஏன் பந்து வீச வாய்ப்பு தரவில்லை என்பது குறித்து ஷிகர் தவான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் அய்யருக்கு பந்து வீசுவதற்கு வாய்ப்பு தரவில்லை. இது ஏன் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் கூறுகையில், இந்த போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது.
அதே போன்று சீரான வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததால், ஒரு புதிய பவுலரை கொடுக்கும் போது, அது ஒருவேளை வெர்க் அவு ஆகவில்லை என்றால், தென் ஆப்பிரிக்கா அணி மேலும் அதிக ஓட்டங்களை குவிக்க வழி வகுத்துவிடும்.
இதன் காரணமாகவே ஐந்து பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து பவுலிங் செய்து வந்தனர். இன்றைய சூழ்நிலை நமக்கு சாதகமாக இருந்திருந்தால், அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்திருக்கப்படும் என்று கூறியுள்ளார்.