கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்?

Pakistan Canada
By Karthikraja Nov 24, 2025 08:14 PM GMT
Report

பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள்

PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான ஆசிப் நஜாம், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொராண்டோவிற்கு வந்தார். நவம்பர் 19 அன்று லாகூருக்கு திரும்பும் PK-798 விமானத்தில் அவர் பணிக்கு வரவில்லை. 

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்? | Why Pakistan Flight Attendant Missing In Canada 

இது குறித்து அவரிடம் நிறுவனம் தரப்பில் இருந்து தொலைபேசியில் கேட்டபோது, உடல்நிலை பாதிப்பு என முதலில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமாகியுள்ளார்.

கனடாவில், இந்த ஆண்டில் இத்துடன் 3 PIA நிறுவன ஊழியர்கள் இதே போல் மாயமாகியுள்ளனர். 

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்? | Why Pakistan Flight Attendant Missing In Canada

இதே போல் கடந்த ஆண்டில் 4 பேர், 2022-23 காலகட்டத்தில் 8 பேர் என கடந்த 3 ஆண்டுகளில் 15 PIA நிறுவன ஊழியர்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்திலிருந்து டொராண்டோவுக்குச் சென்ற விமானத்தில் இருந்த மற்றொரு விமானப் பணிப்பெண் கனடாவில் காணாமல் போனார். அவரது அறையில் "நன்றி PIA" என்ற ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டது. 

கனடாவில் பொலிசாரால் தேடப்பட்டுவந்த இந்திய வம்சாவளியினர் கைது

கனடாவில் பொலிசாரால் தேடப்பட்டுவந்த இந்திய வம்சாவளியினர் கைது

என்ன காரணம்?

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, குறைந்த சம்பளம் மற்றும் PIAவை தனியார் மயமாகும் முயற்சியால் வேலை பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

கனடாவில் அகதிகளுக்கான சட்டத்தில் உள்ள சலுகைகளை பயன்படுத்தி இந்த ஊழியர்கள் அங்கேயே தங்கி விடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்? | Why Pakistan Flight Attendant Missing In Canada

விமான நிறுவன ஊழியர்களுக்கு மற்ற பயணிகளை போல் வழக்கமா விசா தேவைப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் புகலிடம் கோர விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது.

கனடாவில், புகலிடம் கோருவோரை எந்த சூழ்நிலையிலும் சந்தேகத்துடன் நடத்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது.

பாகிஸ்தானில் என் உயிருக்கு ஆபத்து உள்ளது, மத/அரசியல்/பொருளாதார/பாலின துன்புறுத்தல் உள்ளது" என்று யாராவது கூறினால், அவர்கள் உடனடியாக நாட்டில் தங்கவும், வேலை செய்யவும், சட்ட உதவி பெறவும் அனுமதி பெறுகிறார்கள். 

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்? | Why Pakistan Flight Attendant Missing In Canada

கனடாவின் விமான நிலையத்தில் இருந்தே புகலிடம் கோரலாம். அதன் பிறகு, கனடாவிற்குள் நுழைந்த பிறகு, ஒருவருடன் தங்கி, புகலிடம் கோரி வழக்குத் தாக்கல் செய்யலாம். புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு செய்யலாம்.

இந்த செயல்முறை முடிய சில ஆண்டுகள் ஆகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவில் வேலை செய்யவும், இலவச மருத்துவ சிகிச்சை பெறவும், திருமணம் செய்து நிதியுதவி பெறவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்களை தடுக்க ஊழியர்களிடமிருந்து பத்திரங்கள் (bond) பெறுவது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளைப் பறிமுதல் செய்வது, கனடா செல்லும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வயதை 50 ஆக அதிகரித்தது என பல்வேறு நடவடிக்கைகளை PIA மேற்கொண்டும், ஊழியர்கள் மாயமாகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US