சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் ஒரு பயனுள்ள செய்தி
சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆங்கிலத்தில் விண்ணப்பித்தால் என்ன நடக்கும்?
நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு ஆங்கிலத்தில் விண்ணப்பித்தால், சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றில் மீண்டும் விண்ணப்பம் செலுத்துமாறு உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும்.
அதற்கு என்ன காரணம் என்றால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நிபந்தைகளில் ஒன்று, நீங்கள் தேசிய மொழிகளில் ஒன்றில் புலமை பெற்றிருக்கவேண்டும் என்பதாகும்.
விண்ணப்பப் படிவத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றில்தான் பதிலளிக்கவேண்டும்.
சுவிஸ் மாகாணச் செயலகத்தின் விதிகளின்படி, சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், பேசுவதில் B1மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் தகுதி பெற்றிருக்கவேண்டும்.
அதற்குக் காரணம், சுவிஸ் சட்டப்படி, நீங்கள் சுவிஸ் நாட்டவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தால்தான் உங்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும்.
ஆக, சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நீங்கள், சுவிஸ் மொழிகளில் மற்றவர்களுடன் பேசமுடியவில்லை என்றால், உங்களுக்கு சுவிஸ் குடியுரிமை கிடைக்க வாய்ப்பே இல்லை.
ஆகவேதான், நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் மாகாணத்தில் எந்த சுவிஸ் மொழி பயன்படுத்தப்படுகிறதோ, அந்த மொழியில்தான் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டுமேயொழிய, ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கக்கூடாது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |