திருப்பதி ஏழுமலையானின் முகம் ஏன் நாமத்தால் மூடப்பட்டுள்ளது தெரியுமா?
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் பல அற்புதங்களுக்கு பெயர் பெற்றது.
இந்த கோவில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரசிதி பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றாகும்.
விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் வெங்கடேசப் பெருமானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கலியுகத்தின் வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலை பற்றி பல புராணக் கதைகள் இருந்தாலும், வெங்கடேஷ்வரரின் மூடிய கண்கள் ஒரு சுவாரசியமானது.
அந்தவகையில், திருப்பதி ஏழுமலையானின் முகம் ஏன் நாமத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
வெங்கடேஸ்வர சுவாமி பூமியில் துன்பத்திலிருந்து உயிரினங்களை காப்பாற்றுவதற்காக தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிலையின் கண்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
ஏழுமலையானின் கண்கள் தீவிரமான சக்தியைக் கொண்டிருப்பதால், அதன் சக்தியை நேரடியாகப் பார்க்க முடியாது.
பக்தர்கள் பிரச்சனைகளைச் சந்திக்காமல் இருக்க, கண்கள் நாமத்தாலும் சந்தனத்தாலும் எப்போதும் மூடப்பட்டிருக்கும்.
ஆனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும், கண்கள் சிறியதாக இருப்பதால், முகமூடி நகர்த்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் ஏழுமலையானின் கண்களை பார்க்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |