கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் அழுகிய சடலமாக மீட்பு! விதவை பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

Crime covid Chennai Husband Wife
By Raju Jun 16, 2021 06:34 AM GMT
Report

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் 3வது மாடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 8வது மாடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக கொலையாளியான பெண் சிக்கியுள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் திகதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை காணவில்லை என அவரது கணவர் புகாரளித்த நிலையில், மருத்துவமனையின் 8-வது மாடியில் கடந்த 8ஆம் திகதிஅழுகிய நிலையில் சடலமாக அந்த பெண் மீட்கப்பட்டார்.

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 70ஆக மட்டுமே இருந்ததால், ஆக்சிஜன் படுக்கையில் முடியாமல் இருந்த சுனிதா, எப்படி தனியாக 3ஆவது தளத்தில் இருந்து 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியும்?

கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் அழுகிய சடலமாக மீட்பு! விதவை பெண் அதிர்ச்சி வாக்குமூலம் | Widow Health Worker Arrested Murder Covid Patient

அதுவும் அங்குள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் பிணமாக கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சுனிதாவின் சடலத்தை ஏழு மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

உடல் அழுகிவிட்டதால் பிரேத பரிசோதனையின் உடனடியாக எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்க்கிடையே பிரேத பரிசோதனையின் இறுதிகட்ட அறிக்கையில் சுனிதாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய பொலிசார் அந்த கொரோனா வார்டில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த 22-ம் திகதி இரவு ஒப்பந்த தூய்மை பணியாளரான ரதிதேவி, சக்கர நாற்காலில் சுனிதாவை அழைத்துச் சென்றதாக ஒரு ஊழியர் பொலிசாரிடம் கூற, ரதிதேவியிடம் விசாரித்தபோது, அவர் சுனிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று சுனிதாவிடம் கட்டாக இருந்த பணத்தை கவனித்த ரதிதேவி, அதை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 12.30 மணி அளவில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி சுனிதாவை சக்கர நாற்காலியில் வைத்து, ஊழியர்கள் பொருட்களை கொண்டு செல்லும் லிப்டிற்கு தள்ளிச்சென்றுள்ளார்.

லிப்ட் மூலம் 8ஆவது தளத்திற்கு கொண்டு சென்ற அவர், அங்குவைத்து ஏற்கனவே மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த சுனிதாவின் மூக்கில் இருந்த ஆக்ஸிஜன் டியூப்பை எடுத்து கழுத்தில் போட்டு இறுக்கிக் கொலை செய்து அவரது சடலத்தை அங்கேயே போட்டு விட்டு, அவரிடம் இருந்த செல்போனையும், 9,500 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

கட்டடத்தின் 8-வது தளத்திற்கு ஊழியர்கள் யாரும் தினமும் செல்ல மாட்டார்கள் என்பதால், அழுகும் நிலை வரை உடலை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். ரதிதேவி கடந்த மூன்று வருடமாக அங்கு பணிபுரிந்து வந்துள்ளார்.

கணவர் இறந்தவிட இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் திருவொற்றியூரில் வசித்து வருவதாகவும் பணத் தேவை இருந்ததால், தீவிர தொற்று ஏற்பட்டிருந்த சுனிதா எப்படியும் இறந்துவிடுவார் என நினைத்து அவரை கொலை செய்துவிட்டு பணத்தை திருடியதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US