வேலைக்கு சென்ற கணவர்.. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த மனைவி, மகள்.. நடந்தது என்ன?
இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தையை மர்மமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் பேகூர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சன்னவீர சாமி. இவரது மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் அவர் வேலை நிமித்தம் காரணமாக அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் 4 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
இதையடுத்து சன்னவீர சாமி வீட்டிற்கு வந்த போது தனது மனைவி சந்திரகலா மற்றும் அவரது நான்கு வயது குழந்தை ரதன்யா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளரான முருகன் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நகை திருட வந்த மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்தார்களா? அல்லது தனிப்பட்ட விரோதமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.