நள்ளிரவில் போன் பேசி வந்த மனைவி! தட்டி கேட்ட கணவரை மார்பில் குத்தி துடிக்க துடிக்க கொலை செய்த பயங்கரம்
இந்தியாவில் இரவு முழுவதும் செல்போனில் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்ணை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இலக்கியா(26).
இலக்கியா கல்லூரியில் படிக்கும் போது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை.
இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் இலக்கியா நள்ளிரவில் நீண்ட நேரம் சிரித்து கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்குள் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த பாலமுருகனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக பொலிஸ் இலக்கியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.