தேனிலவு கொலை வழக்கு: கணவன் கொல்லப்படும் முன் 100 முறை மர்ம நபரை அழைத்த மனைவி
மேகாலயா தேனிலவு கொலை வழக்கில், தனது கணவன் கொல்லப்படும் முன், மர்ம நபர் ஒருவரை 100 முறை மொபைலில் அழைத்துப் பேசியுள்ளார் அவரது மனைவி.
தேனிலவு கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ராஜா கொலை தொடர்பாக அவரது மனைவியான சோனம், சோனமுடைய காதலரான ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார், ஆகாஷ் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
100 முறை மர்ம நபரை அழைத்த மனைவி இந்நிலையில், தனது திருமணத்துக்கு முன், சோனம், சஞ்சய் வர்மா என்பவரை 100 முறை மொபைலில் அழைத்துப் பேசியது தெரியவந்தது.
திருமணத்துக்குப் பின்னும் அழைப்புகள் தொடர்ந்துள்ளன.
வழக்கில் புதியதாக ஒரு நபரின் பெயர் அடிபட, யார் அவர் என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
ஆவரது மொபைலை தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
தொடர் விசாரணையில், சஞ்சய் வர்மா என்பது வேறு யாருமல்ல, ராஜா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சோனமுடைய காதலனான ராஜ் குஷ்வாஹாதான் என்பது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |