வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற கணவன்! வாசலிலே பிடித்து அடித்து நொறுக்கிய மனைவி: கேமராவில் பதிவான காட்சி
இந்தியாவில் வேறொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த கணவரை, மனைவி கையும் களவுமாக பிடித்து அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் கணவன் மீது சந்தேகம் அடைந்த மனைவி, அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தொடந்து பின்பற்றியுள்ளார். அதன் படி அவர் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் காரை விட்டு வெளியேறும் போது, உடன் ஒரு பெண்ணுடன் இறங்கியுள்ளார்.
தான் சந்தேகப்பட்டது உண்மையாகிவிட்டது என்று ஆத்திரமடைந்த அந்த கணவரின் மனைவி, உடனடியாக இருவரையும் கையும் களவுமாக பிடித்து அடிக்கத் துவங்கினார். அதில் அந்த பெண் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொள்ள, ஆத்திரத்தில் அந்த பெண் கீழே இழுத்து கண்மூடித்தனமாக அடிக்கிறார்.
அப்போது கணவரிடம் இது பற்றி கேட்க, அவர் எதுவுமே பதில் சொல்லாமல் அந்த பெண்ணை காப்பாற்றுவதிலே இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.