இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ் - கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் பாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ்களை பலரும் தங்களுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரமாக கருதுகின்றனர்.
இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளையில், பாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ் கிடைக்காமல் போனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ்
அதே போல், இன்ஸ்டாகிராமில் 2 பாலோவர்ஸ் குறைந்ததால், பெண் எடுத்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த விஜேந்திரா என்பவர் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
நிஷா ரீலிஸ் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவழிக்காமல், வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துமாறு, நிஷாவை அவரது கணவர் விஜேந்திரா வலியுறுத்தியுள்ளார்.
அதே போல், நிஷா இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை குறைத்து, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில், நிஷாவின் இன்ஸ்டாகிராமில் 2 பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இதனை கண்டு கணவர் மீது ஆத்திரமடைந்த நிஷா, கணவருடன் வாக்குவாதம் செய்து விட்டு, துணிமணிகளுடன் தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
மேலும்,கணவரின் பேச்சை கேட்டு, வீட்டு வேலைகளை செய்து, ரீலிஸ் போட முடியாததால் தனது பாலோவர்ஸ் குறைந்துவிட்டதாக கணவர் மீது நிஷா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நிஷா நாள் முழுவதும் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதாக அவரின் கணவர் விஜேந்திராவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் அழைத்து, குடும்ப வாழ்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினர். ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |