31 வயதான மனைவி பாம்பு கடித்ததில் இறந்து விட்டதாக சடலத்தை பார்த்து அழுத கணவன்! விசாரணையில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் மனைவி பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டதாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் அவரே அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). இவரது மனைவி ஆனந்தி (31), பையனூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16), என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர்.
ஆனந்தி, ரவிக்குமாரின் அக்கா மகள் ஆவார். இருவரும் பையனூரை சேர்ந்தவர்கள். இந்நிலையில், ரவிக்குமார் தினமும் குடித்துவிட்டு, அவரது மனைவி ஆனந்தியிடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேப்போல், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்துள்ளார்.
அப்போது, உன்னை பற்றி பொலிசில் புகார் அளித்து சிறையில் தள்ளுவேன் என ஆனந்தி கணவனிடம் கூறினார். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் படுத்து உறங்கி விட்டனர்.
நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனந்தி இறந்ததை தெரிந்து கொண்ட ரவிக்குமார் விடிந்ததும் தனது மனைவியின் நெற்றி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பூச்சி மற்றும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக அருகில் உள்ள உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.
இதுகுறித்து, தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ரவிக்குமார் அழுது கொண்டிருந்தார். இதையடுத்து ஆனந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொலிசார் விசாரித்தனர்.
இதில், ஆனந்தி பாம்பு கடித்ததில் இறக்கவில்லை, ரவிக்குமார் தாக்கியதில் தான் இறந்தார் என்ற அதிர்ச்சி உண்மை பொலிசாருக்கு தெரியவந்தது.
பின்னர் பொலிசார் ரவிக்குமாரை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.