கணவன் செய்த அறுவை சிகிச்சை; திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த உண்மை...
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து தன்னை உடலுறவு கொள்ள முடியாததாக ஆக்கியது என்று கூறி மழுப்பியுள்ளார்.
பின்னர் உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை ஒன்று செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன தனது கணவர் ஒரு பெண்ணாகவே இருந்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோத்ரி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஷீத்தல் என்ற பெண் தனது கணவர் விராஜ் வர்தன்மீது "இயற்கைக்கு மாறான உடலுறவு" மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். எப்ஐஆரில் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் விராஜ் வர்தனை சந்தித்ததாக ஷீத்தல் பொலிஸாரிடம் கூறினார்.
அச்சமயத்தில் ஷீத்தலின் முன்னாள் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார், அப்போது 14 வயதில் மகளும் இருந்துள்ளார்.
அப்போது, விராஜ் வர்தன் மற்றும் ஷீத்தல் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் 2014-ல் முறைப்படி திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு காஷ்மீர் சென்றனர்.
ஆனால், அந்த நபர் மனைவியுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் பல நாட்களாக சாக்குப்போக்கு கூறி வந்தார். ஷீத்தல் அவரை வற்புறுத்தியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்தபோது ஏற்பட்ட விபத்து தன்னை உடலுறவு கொள்ள முடியாததாக ஆக்கியது என்று கூறியுள்ளார்.
ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து விடுவதாக அந்தப் பெண்ணுக்கு உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 2020-ல், உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாக அவர் ஷீத்தலிடம் கூறினார். ஆனால், தான் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் பின்னர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகவும், உண்மையை யாரிடமாவது வெளிப்படுத்தினால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் ஷீத்தல் கூறினார்.
டெல்லியில் வசிக்கும் குற்றவாளி, வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்று கோத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் தெரிவித்தார்.