நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்! குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவரின் கொடூர செயல்
கர்நாடக மாநிலத்தில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடி பழக்கத்தால் தினமும் ஒரு குடும்பம் நாசமாகி வருகின்றது. கர்நாடக மாவட்டத்திலும் குடி பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஷாகிர். இவரின் மனைவி ஆயிஷா. இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து முடிந்து 6 வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஷாகிற்கு குடி பழக்கம் உள்ளதால் தினமும் குடித்து விட்டு மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். சம்பவதினத்தன்று ஷாகிர் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பொழுது கணவன் மனைவி இடையே தகராறு வெடித்துள்ளது. இதனால் பொறுமையை இழந்த ஷாகிர், மனைவி ஆஷாவை கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் ஷாகிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.