கணவனை கொன்று கிச்சனில் புதைத்த கொடூரம்! காதலனின் உதவியுடன் மனைவி செய்த பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி
இந்தியாவில் காதலன் உதவியுடன், மனைவி கணவனைக் கொலை செய்த சம்பவத்தில் முழு பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
மும்பையில் இருக்கும் தஹிசர் பகுதியில் வசித்து வருபவர் ரெய்ஸ் ஷேக். இவருக்கு ரஷிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ரஷிதா அங்கிருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ரஷிதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அமிஷ் விஷ்வகர்மா என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.
இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்த நிலையில், இது குறித்த உண்மை ரெய்ஸ் ஷேக்கு தெரிந்தால், நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன் படி, சம்பவ தினத்தன்று, வேலை முடித்துவிட்டு, இரவு நேரம் கணவன் வீட்டிற்கு திரும்பிய பின்பு, காதலன் உதவியுடன் கணவனை கழுத்தை நெரித்து ரஷிதா கொன்றுள்ளார்.
அதன் பின் அவரது சடலத்தை ஒரு சாக்கு மூட்டை கட்டியில், சமையலைறையில் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது குழந்தைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
மறுநாள் வழக்கம் போல் ரஷிதா இருந்துள்ளார். ஆனால், அக்கம்பக்த்தினர், கணவரை எங்கு சில நாட்களாகவே காணவில்லை என்று கேட்க, அவரின் பதில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் பொலிசாரிடம் சொல்வதற்கு முன், இவர் சென்று கணவனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். பொலிசாரின் தொடர் விசாரணையின் போது, ரஷிதாவின் வீட்டிற்கு அமித் அடிக்கடி வந்து செல்வதை கூறியுள்ளனர்.
இதையடுத்து பொலிசாரின் சந்தேகம் மனைவி ரஷிதா மீது திரும்ப, அவரிடம் விசாரிப்பதற்காக வீட்டிற்கு சென்று, வீட்டை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவருடைய சமயலறையில், ஒரு பகுதியில் மட்டும் புது டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்ததை கண்ட பொலிசார், இது குறித்து கேட்ட போது, ரஷிதாவின் பதில் முன்னுக்கு, பின்னாக இருந்துள்ளது.
இதனால் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், அப்பகுதியை தோண்டி பார்த்த போது, உள்ளே அவர் கணவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
அதன் பின் தான் செய்த குற்றத்தை ரஷிதா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், காதலன் அமித் விஷ்வகர்மா தலைமறைவாகிவிட்டதால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.