காதலனுக்காக... 2-வது கணவரை கொன்று புதைத்த மனைவி: 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த திடுக்கிடும் உண்மை
தமிழகத்தில், காதலனுக்காக இரண்டாவது கணவரை மனைவி கொலை செய்து தென்னை மரத்திற்கு அடியில் புதைத்துள்ள சம்பவம் மூன்று வருடத்திற்கு பின் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9-வது தெருவில் வசித்து வருபவர் அபிராமி(33). தங்கராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் தங்கராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
காளிராஜுன் தாயார் கேட்ட போது, தான் வெளியூரில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் மகன் திரும்பாத காரணத்தினால், பொலிசில் இது குறித்து காளிராஜுன் தாயார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அபிராமியுடன் காளிராஜ் இருப்பது தெரியவந்ததால், பொலிசார் அபிராமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, காளிராஜை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியது.
இது காளிராஜுக்கு தெரியவர, மாரிமுத்து மற்றும் காளிராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காளிராஜை மாரிமுத்து அடித்து கொன்று விட, பின்னர் தன் நண்பர்களின் உதவியுடன், வீட்டில் உள்ள தென்னை மரத்திற்கு அடியில் காளிராஜின் சடலத்தை புதைத்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின், தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது காளிராஜின் சடலம் எலும்பு கூடாக மீட்கப்பட்டது. இதையடுத்து அபிராமி, காதலன் மாரிமுத்து மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் பொலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.