முதல் மனைவி அனுமதியுடன் தன்னை விட 22 வயது குறைவான பெண்ணை மறுமணம் செய்த நபர்! 2ஆம் தாரத்தால் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்

Crime Investigation Murder
By Raju Jul 29, 2021 10:58 AM GMT
Report

தமிழகத்தில் தாலி கட்டிய கணவனை மனைவியே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். 53 வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

தாரா என்பவருக்கும் அன்பழகனுக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் தாராவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவனை பிரிந்து மணவாளன் நகரில் மகனுடன் வசித்து வருகிறார். முதல் மனைவியின் அனுமதியுடன் சிவபுரம் பகுதியை சேரந்த ஷோபனாவை (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகன் திருமணம் செய்தார்.

அன்பழகன், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியில் வீடு கட்டி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அன்பழகனோட தாய் முனியம்மாள் இறந்தார். அதன் பிறகு சிவபுரத்துக்கு வந்து தாயின் இறுதி கடமைகளை அன்பழகன் செய்தார். அப்போது கொரோனா லாக் டவுன் நடைமுறைக்கு வந்ததால் சிவபுரத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தர்மராஜூவுக்கும் ஷோபனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

இது அன்பழகனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தர்மராஜுவை வீட்டுக்கு வரக்கூடாது என்று அன்பழகன் கூறியுள்ளார்.

இதனால் தர்மராஜும் ஷோபனாவும் அன்பழகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 22ம் திகதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வெளியே அன்பழகன் கட்டிலில் படித்திருந்த போது தர்மராஜ் அன்பழகனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறம் கூவம் ஆற்றுப்படுகையில் புதைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் திகதி முதல் அன்பழகனை காணவில்லை என நாடகமாடிய மனைவி ஷோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் ஷோபனாவும் மாயமானார். இதையடுத்து அன்பழகன் உறவினர்கள் அவரை கண்டுபிடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிசார் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையில், அரக்கோணத்தில் உள்ள லாட்ஜில் ஷோபனா தங்கியிருப்பது தெரியவந்தது.

லாட்ஜுக்கு பொலிசார் சென்றபோது ஷோபனா தர்மராஜுடன் தங்கியிருந்தார். இரண்டு பேரையும் விசாரிக்கும்போது தான் மேலே கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ஷோபனா, தர்மராஜ், கொலைக்கு உதவிய தர்மராஜின் நண்பன் விக்னேஷ் (23) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர் 

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US