உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்..மனைவியின் பதிவு
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வீரர் மரணம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.

அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.
மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
நான் கடைசியாக பார்க்கும் தருணம்
இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |