கணவனின் சிறுநீரகத்தை விற்ற மனைவி: பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்
இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சிறுநீரகத்தை விற்று அதில் கிடைத்த பணத்துடன் காதலனுடன் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் சங்க்ரெய்ல் பகுதியை சேர்ந்த பெண் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள், தனது மகளின் வருங்கால திருமணம், குடும்ப சூழ்நிலை என பல காரணங்களை கூறி கணவனுக்கு பொருளாதார ரீதியாக சிக்கல் கொடுத்துள்ளார்.
அழுத்தம் தாங்கிக் கொள்ள முடியாத கணவன் ஒருகட்டத்தில் தன்னுடைய சிறுநீரகத்தை விற்க முடிவு செய்துள்ளார்.
இதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், தனது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்டு, கவிதா தன்னுடைய பேஸ்புக் காதலனுடன் மாயமானார்.
பராக்பூர் பகுதியில் காதலனுடன் கவிதா வசித்து வருவதை அறிந்த கணவன் அங்கு சென்று சந்தித்துள்ளார்.
இருப்பினும் விவாகரத்து வழங்குவேன் என கூறி பலமுறை அவரை அங்கிருந்து துரத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவன் பொலிசாரிடம் புகார் அளிக்கவே, அதிகாரிகள் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.