பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி

United Kingdom
By Balamanuvelan Feb 26, 2024 04:47 AM GMT
Report

பிரித்தானியர் ஒருவர் கர்ப்பிணியான தன் மனைவியை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நிலையில், இறக்கும் முன் அந்தப் பெண் செய்த செயல்களே, வழக்கில் முக்கிய சாட்சியங்களாக உதவி, அவரது கணவருக்கு தக்க தண்டனை பெற்றுத்தரச் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தேனிலவின்போது மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்த ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31) என்னும் பெண், மலையுச்சியிலிருந்து சறுக்கி விழுந்துவிட்டதாக அவரது கணவர் கூறியிருந்தார். மலையுச்சியிலிருந்து விழுந்ததில், ஃபவ்ஸியா உயிரிழந்ததுடன், அவரது கர்ப்பத்திலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டது.

பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி | Wife Sends Husband To Jail After Visiting Uk

Image: Fawziyah Javed

ஆனால், உடற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியா தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக அவரது உடலில் பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படவே, அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி

மலையுச்சியிலிருந்து விழுந்த ஃபவ்ஸியா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒருவரிடம், ’என் கணவரை என் அருகே வரவிடாதீர்கள், அவர் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி | Wife Sends Husband To Jail After Visiting Uk

அன்வரும் ஃபவ்ஸியாவும், 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதம் காதலிக்கத் துவங்கி, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயம் செய்யப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ஆனால், சீக்கிரமாகவே தம்பதியருக்குள் பிரச்சினைகள் உருவாக, பலமுறை ஃபவ்ஸியாவைத் தாக்கியிருக்கிறார் அன்வர்.

ஃபவ்ஸியா, தன் கணவனை பிரிய திட்டமிட, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார் அன்வர். தன்னை விவாகரத்து செய்ய ஃபவ்ஸியாவை அனுமதிக்கமாட்டேன் என்றும், தானும் அவரை விவாகரத்து செய்யமாட்டேன் என்றும், ஃபவ்ஸியாவை இன்னொருவருடன் வாழவிடமாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார் அன்வர்.

ஃபவ்ஸியா ஒரு சட்டத்தரணி ஆவார். ஆக, திருமணமானதுமே கணவன் மனைவிக்குள் பிரச்சினை உருவாக, தனது கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணிய அவர், கணவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டத் துவங்கியுள்ளார்.

பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி | Wife Sends Husband To Jail After Visiting Uk

Image: PA

கணவர் தன்னை மிரட்டுவதை மொபைலில் பலமுறை பதிவு செய்ததுடன், இரண்டுமுறை பொலிஸ் நிலையம் சென்று, தன் கணவர் தன்னை மிரட்டுவது குறித்து புகாரும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஃபவ்ஸியா தன் மரணத்து முன் திரட்டி வைத்த ஆதாரங்களே, அன்வர் குற்றவாளி என முடிவு செய்ய முக்கிய ஆதாரங்களாக உதவியதாக அரசு தரப்பு சட்டத்தரணியான Alex Prentice என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி | Wife Sends Husband To Jail After Visiting Uk

Image: Ben Lack Photography Ltd

ஒரு சட்டத்தரணியாக, ஆதாரங்களைத் திரட்டிவைத்துவிட்டு ஃபவ்ஸியா உயிரிழந்துள்ளார் என்கிறார் Alex Prentice. ஆக, கல்லறைக்குச் சென்றபிறகும், தன்னைக் கொலை செய்த அன்வரை தப்பவிடாமல் சிறைக்கு அனுப்பிவிட்டார் ஃபவ்ஸியா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US