கணவர் இறந்த மறுநாளே மனைவி எடுத்த விபரீத முடிவு! குழந்தை இல்லாத காரணத்தினால் நடந்த துயரம்
தமிழகத்தில் கணவர் இறந்த மறுநாளே மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு செல்வகுமார்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், செல்வகுமாரும், நித்யா என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்காத காரணத்தினால், மிகவும் ஏக்கத்திலும், மன உழைச்சலிலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் செல்வகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் சற்றும் எதிர்பார்க்காத நித்யா கடும் அதிர்ச்சியில் உடைந்து போனார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நித்யா நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட உறவினர்கள் நித்யாவின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். அதன் பின் பொலிசார் உடனடியாக விரைந்து வந்து நித்யாவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருவருன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.