கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி! பின்னர் வெளிவந்த தகவல்
தமிழகத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவ வழக்கு ஒன்றில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் ஜீவா (வயது 29). தச்சு தொழிலாளியான இவருக்கு கவிதா (வயது 25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.
இவர் கடந்த 16-ம் தேதி ஜீவா அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார்.
இதனை அடுத்து மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு அப்போது மதுபோதையில் இருந்த தனது கணவர் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரிடம் கவிதா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜீவாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே ஜீவாவின் பிரேத பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர்கள் பொலிசாரிடம் கொடுத்தனர்.
அதில் ஜீவாவின் முகம், வாய் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டர்.
அப்போது கவிதா மற்றும் ஜீவாவின் நண்பர் ராஜா (வயது 39) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை கொண்ட போது அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் பொலிசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பவே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஜீவாவை கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பொலிசாரிடம் கவிதாவும், ராஜாவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதில், ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றபோதுதான் ஜீவாவுக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ராஜாவுக்கு, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஜீவா வீட்டில் இல்லாத சமயம் கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ராஜா தனது கள்ளக்காதலை வளர்ப்பதற்காக சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு தனியாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு கவிதாவை அடிக்கடி அழைத்துச் சென்று ராஜா உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனிடையே கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் ஜீவா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா, இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கி, மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி ஜீவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மதுபோதையில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கவிதா மற்றும் ராஜாவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.