பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவில் காட்டுத் தீ
கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பால்ட் ரேஞ்ச்(Bald Range) என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத் தீ சம்பவமானது கிட்டத்தட்ட 13,300 கால்பந்து மைதானங்களின் அளவிற்கு சமமான 9,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி தொடர்ந்து கட்டுப்பாடின்றி எரிந்து வருகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சம்மர் லேண்ட்(Summerland) மாவட்டத்திற்கு முதல் நிலை அவசர பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மாகாணம் முழுவதுமாக விரிவுபடுத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சொத்துக்கள் காட்டுத்தீயில் நாசமாகி இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் பாதிப்புகள்
Thousands of people in Summerland, B.C., are being evacuated as intense wildfires threaten their community.
— Mark Carney (@MarkJCarney) August 8, 2026
To the brave firefighters and first responders working tirelessly to keep people safe: thank you.
The federal government stands ready to help and support the Government…
காட்டுத் தீயை அணைக்க மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 1500 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
காட்டுத் தீ பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் 39 வெளியேற்ற உத்தரவுகளையும், 49 பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
அத்துடன் சனிக்கிழமை சம்மர்லேண்ட் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. குடிநீரில் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக அமைப்பு கலந்ததால் மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |