பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா? எதிர்க்கட்சி தரப்பு விளக்கம்
பிரித்தானியா பொதுத்தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிட்டத்தட்ட தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான லேபர் கட்சி வந்துவிட்டது.
இந்நிலையில், லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா?
அந்தக் கேள்விக்கு பதிலளித்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையருமான பீற்றர் (Peter Mandelson), அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்வி வேடிக்கையானது என்று கூறும் அவர், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவேண்டுமானால், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும், ஆனால், அதில் பிரித்தானிய வாக்காளர்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமலே அதனுடன் நெருக்கமான உறவுகளை பிரித்தானியா ஏற்படுத்திக்கொள்ளும் என்று கூறியுள்ளார் பீற்றர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |