கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவுமா? செவிலியரின் பதில்
கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில், அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவும் என்னும் ஒரு கருத்து பல நாடுகளில் நிலவுகிறது.
அது உண்மையா என மகப்பேறு செவிலியர் ஒருவரிடம் கேள்வி எழுப்பட்டது. அவர் கூறிய விளக்கத்தை இந்த செய்தியில் காணலாம்!
அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவுமா?
கர்ப்பகாலத்தின் third trimester எனப்படும், கர்ப்பமுற்ற 28 முதல் 40 வாரம் வரையிலான காலகட்டத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது, பிரசவத்தை எளிதாக்கும் என்னும் ஒரு கருத்து நிலவுகிறது.

அது குறித்து மகப்பேறு செவிலியரான, அதாவது, பிரசவிக்க உதவும் செவிலியரான ஆஞ்சீ என்னும் பெண்ணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆஞ்சீ, நைஜீரியாவில் இது தொடர்பில் 2,400 கர்ப்பிணிகளிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார்.
அதாவது, தங்கள் கர்ப்பகாலத்தின் இறுதிகட்டத்தில் அன்னாசிப்பழம் சாப்பிட்ட 1,200 பேரிடமும், சாப்பிடாத 1,200 பேரிடமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வில், அன்னாசிப்பழம் சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சற்று எளிதாக இருந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, அன்னாசிப்பழம் சாப்பிடாதவர்களைவிட, அன்னாசிப்பழம் சாப்பிட்டவர்களுக்கு, பிரசவ வலி, சுமார் 1.7 மணி நேரம் குறைவாக இருந்ததுடன், சாதாரண பிரசவம் நிகழ்ந்ததாகவும், அதாவது, சிசேரியன் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது என்றும், அதனால், கர்ப்பகாலத்தின் இறுதி நாட்களில், அன்னாசிப்பழம் சாப்பிடுவது பிரசவத்துக்கு உதவக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆஞ்சீ.
அன்னாசிப்பழத்தில் bromelain என்னும் என்சைம் உள்ளது. இந்த என்சைம், பிரசவத்தை எளிதாக்க உதவுகிறது.
என்றாலும், நம் நாடுகளில் இதை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் ஆஞ்சீ.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |